மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவி 1628!
நிலை மாறும் பசுமை!

இயற்கை தரும் அருங்கொடைகள்
உயர்ந்த வாழ்வின் உயிர் நிலைகள்
பசுமை தங்கும் புவிப் பரப்பில்
பாழும் வரட்சி வருதல் முறையோ!

தாவரங்கள் தரு பயன்கள் தான்
தவிப்பின்றி எமை வாழவைக்கும்
உயிர் மூச்சும் உண்ணும் யாவும்
நன்றியோடு நோக்கச் செய்யும்!

உண்டவுடன் ஓடிச் செல்ல நாம்
இவ்வுலகில் விருந்தாளிகளல்ல
நன்றிக்கடன் செலுத்தவேண்டும்
நம் தலைமுறைக்கும் காக்க வேண்டும்!!

பசுமைப் புரட்சி செய்து பயிர்காத்த
பண்புடையர் செயல் கண்டோம்
வேளாண்மை காத்தவர் கை போல்
காத்திடவே விழிப்புக் கொள்வோம்!

காடு வெட்டி நாடாக்கும் காலம்
கண்டோம் இயற்கையின் சீற்றம்
பயிர் வளர்த்து விடிவு காண்போம்
பசுமை காத்துப் பயன் ஈவோம்!
சிவதர்சனி இராகவன்
12/5/2022

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading