மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

இரா.விஜயகௌரி

நிலை மாறும் பசுமை……….

பசுமையும் பயிர்களும் வளம் கொழிக்க
உயிர்களும் உயிர்ப்பும் வசமாகும்
நிலை தடுமாறும் மனிதர்களால் இன்று
வசந்தம் கானலின் ஊற்றாச் சே

இயற்கையும் இயல்பும் கைகோர்க்க
இங்கித வாழ்வில் எழில் கொஞ்சும்
இணையா நெறிமுறை பிறழ்ந்ததனால்
சூழலும் சுற்றமும் பாழாச்சு பரிதவிப்பாச்சு

புழுவும் பூச்சியும் சொந்தம் கொள்ள
நிதம் வானவில் எழிலுடன் எழும் மலர்கள்
செழிப்பின் சேமிப்பை உணர்த்தி எழும்
அழகை தொலைத்து நாம் நிலை குலைதந்தோம்

பசுமையின் புரட்சி வெடித்தெழட்டும்
பசுந்தரை யாவும் செழுமை கொஞ்ச
வாழும் வாழ்வே வரமாகும் அங்கு
உடல் உள நலங்கள் பலமாகும்

வசப்படும் பசுமையை வளப்படுத்தி அந்த
வரத்தின் செழுமையுள் வாழ்வு வெல்வோம்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading