பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

****எம் முன்னோர் வாழ்வு ***

வாழ்வாங்கு வாழ்ந்தே வாழும்முறை தந்தவர்
தாழ்வில்லா வாழ்வாலே தரணியை ஆண்டவர்
ஏழ்கடல் தாண்டாமல் எட்டுத்திசை எட்டாமல்
பாழ்பட்டுப் போகாமல் பாரில் உயர்ந்தவர்

காடுகரம்பை வெட்டி கழனியாக்கினார்
ஓடும் உதிரத்தை வியர்வை ஆக்கினார்
வாடாமல் பயிர்களுக்கு வரம்பு கட்டினார்
தேடாத் திரவியத்தை தேடி உயர்ந்தார்

ஆடுமாடு எல்லாமே அணைத்து எடுத்தார்
பாடுபட்டு பாலுக்காய் பார்த்து வளர்த்தார்
கோடு போட்டு கூடுகட்டி கோழி வளர்த்தார்
வீடு சுற்றி விளைமரத்தால் வேலி அமைத்தார்

பாலைக் காய்ச்சி பருகியவர் பலமும் பெற்றார்
வேலையில்லா வெட்டியாக இருக்க மறந்தார்
ஓலைப் பாயை ஓய்வுநேர வேலை ஆக்கினார்
சேலைத் தலைப்பில் சேர்த்த பணத்தை செருகிக் கொண்டார்

தென்னை பனை மாமரங்கள் தேடிக் கொண்டார்
முன்னைப் பழப்பொருளாலே முதிர்ச்சி இழந்தார்
பின்னைக்கும் பிணியின்றி பேதமும் இன்றி
இன்னலின்றி இணைந்து கூடி
இனிதாய் வாழ்ந்தாரே

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading