பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

23.06.22
ஆக்கம்-232
மீளெழும் காலம்
அந்த மண் சுகந்தருமா அல்லது
இந்த மண் மகிழ்வுடன் பகிர்ந்திடுமா
அகதி அந்தஸ்து கோரியவர் மனம்
படும்பாடு திண்டாட்டம்

போராட்ட வாழ்வு முடிவில்லாத ஆராய்வு
செவ்வாய்க் கிரகத்தில் கூட வாழ்ந்திடலாம்
எம் மண்ணில் எப்போதும் விடை கிடைக்காதாம்

உணவுப் பசி துரத்த உயிர்ப்பலி குடிக்க
பயிர்கள் நாசமிட மானிடர் குமுறலிட
அலைந்து உருக்குலைந்து எல்லாம் தொலைந்திட

மழையில் நனைந்த மண் வீடாய் கலையும் காலமே
மீண்டும் எப்போது திரும்பும் மீளெழும் காலமாய்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading