சக்தி சிறினிசங்கர்

சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு
பிரிவுத்துயர்!
காற்று வீசும் திசைகளெல்லாம்
தமிழின் பெருமை மணம் வீச
ஊற்றாக நதியாக கடலாகிய
போற்றுதலுக்குரிய பெருமங்ககையே!
பெண்ணியம் பற்றி
மண்ணிலே முழங்கி
கவிகளும் கதைகளும் காவக்
குவிந்த பாராட்டுகளில் திளைத்து
பவித்திரமாய் பலமேடைகளில்
பேசிய நீவிர்
விதிவிட்ட கோட்டுவழி
விடுதலையாகிப் போனீரோ?
வள்ளுவன் உரைத்த
குறள்வழி புகழொடு தோன்றி மறைந்தீரோ? பள்ளிகள் எல்லாம்
பைந்தமிழ் வளர்த்தீர்
பிள்ளைகள் போலே மாணவச் செல்வங்களை
பாசமுடன் அரவணைத்தீர்
தாகம் கொண்டார் சைவமும் தமிழும் வளர்க்க
பாகம் ஆனீர் பாமுகப் பந்தலில்
வாயார வாழ்த்திடுவீர்
தாயாக வாழ்ந்திட்டீர்
கன்னல் சுவையொடு பேசி
பின்னிப்பிணைந்து நீவிர்
முகம் தெரியா உறவாகி
அகம் நிறைந்து வாழ்கிறீர்!
நித்தமும் ஒலிக்கும் குரல் நினைவலைகளில்
நீண்டு கொண்டே இருக்கும்!
ஓம் சாந்தி!
நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading