மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

திருமதி .அபிராமி கவிதாசன்.

29.06.2022
சந்தம் சிந்து சந்திப்பு வாரம் 179
கவித்தலைப்பு !
“ பிரிவு துயர்”
பிரியா வரம்வேண்டும்
பெருங்கொடுமை பிரிவுதுயர்
பிரிந்திட இழந்திடும்
பிள்ளைகளின் துடிக்கும்உயிர் //

கண்களுக்குள் வைத்திருந்த
களையாத ஓவியம்
மண்ணுக்குள் மறைந்தன
மனிதஇனக் காவியம் //

நினைந்து நினைந்து
நித்தமும் தேடியும்
வினைமுடிந்து மீண்டெழுந்து
வீடுவரா ஓடின //

உறவாடி மகிழ்ந்தயுள்ளம்
உயிரைத்தேடி ஏங்கின
பிறந்திடவேண்டுஎன்
பிள்ளையென தாங்கிட //

ஓயாது ஒலித்தகுரல்
ஓசையற்று உருகியதே
தீயான ஒளிதீபம்
திரியற்று கருகியதே //

உறவினுள் பகைத்தஉயிர்
உலகினை துறந்திடவே
இறந்த செய்தியின்பின்
இதயம் திறந்தனரே //

உருவமற்ற உலகினிலே
உலாவரும் என்மனமோ
அருவியாகி விழிகளும்
அன்பாலே புண்மனமே //

நன்றி வணக்கம் 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading