மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏
வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு — 180

தலைப்பு — பிரிவுத்துயர் மறைத்தாலும் மறக்கோம்.

மெழுகாய் உருகி மேதினியில் உங்கள்
பழுத்த அறிவால் பலருக்கும் உதவி
அழுத்தமாய் பெயரை அவனியில் பதித்தீர்கள்
எழுத்தால் வாழ்த்துகிறோம் ஏற்றத்தை காட்டுதற்கு.

இறக்கும்வரை இனிதே இப்புவிக்கு ஆற்றியவை
இறப்போடு மறையாது என்றும் நிலைத்திருக்கும்
மறக்கோம் பிரிவுத்துயர் மறைத்தாலும் எம்மோடு
இருக்கும் உம்பெயர் என்றென்றும் ஓவியமாய்.

உள்ளத்தில் உயர்வாய் உதித்த சிந்தனையால்
நல்லவற்றை நாளும் நம்மவர்க்கு வழங்கி
தொல்லைகள் நீங்கிட துணையாய் பணியாற்றி
நல்லநிலை பெற்றீர்கள் நற்பெயரின் பதிவோடு.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
28/06/2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading