08
May
பாசப்பகிர்வினிலே………!!
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
சுகந்தம் உண்டு
அனல் கக்கும் கோடையிலே
அவதியுண்டு ஆங்காங்கே
ஆன்றோர்கள் வாழ்வினிலே
அனுபவமும் சேர்ந்திருக்கும்
பிறைநுதலின் நெற்றியிலே
பொட்டிருக்கும்
பிற்போடும் கருமமும்
பின்னிற்கும் வாழ்வினிலே
திறனுடனே திறமையும்
தித்திப்பாய் சேர்ந்திருக்கும்
அறனதுவும் மறனதுவும்
அன்போடு கலந்திருக்கும்
வெற்றியுடன் தோல்வியும்
இணைந்திருக்கும்
வேறுபாடு தோன்றாத
வாழ்வினிலும் வளமிருக்கும்
வளமிருக்கும் வாழ்வினிலே
வசந்தம் உண்டு
வண்ணத் தமிழ் பாவினிலும்
சுகந்தம் உண்டு!
நகுலா சிவநாதன் 1678
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.