நகுலா சிவநாதன்

சுகந்தம் உண்டு

அனல் கக்கும் கோடையிலே
அவதியுண்டு ஆங்காங்கே
ஆன்றோர்கள் வாழ்வினிலே
அனுபவமும் சேர்ந்திருக்கும்

பிறைநுதலின் நெற்றியிலே
பொட்டிருக்கும்
பிற்போடும் கருமமும்
பின்னிற்கும் வாழ்வினிலே

திறனுடனே திறமையும்
தித்திப்பாய் சேர்ந்திருக்கும்
அறனதுவும் மறனதுவும்
அன்போடு கலந்திருக்கும்

வெற்றியுடன் தோல்வியும்
இணைந்திருக்கும்
வேறுபாடு தோன்றாத
வாழ்வினிலும் வளமிருக்கும்

வளமிருக்கும் வாழ்வினிலே
வசந்தம் உண்டு
வண்ணத் தமிழ் பாவினிலும்
சுகந்தம் உண்டு!

நகுலா சிவநாதன் 1678

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading