அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

21.07.22
ஆக்கம்-235
போற்றிடும் நெற்றியடி
எத்தனை சோகம் இத்தனை வயதில்
அத்தனையும் எழுதமுடியாது ஏக்கமுடன்
பெருமூச்செறிகிறது பேனா

ஏதிலியாய் எங்கு போனாலும்
துரத்திய தாயக நினைவுகள்
பசிக்கும் பாலுக்கும் பணமில்லாது
தவிக்கும் நெஞ்சங்களில் பஞ்சம்
புரட்டி எடுக்க

திரண்டு வந்த மக்கள் புரட்டிப்
போட்டு சுக்கு நூறாக்கிய அரசியல்
மிரண்டு போனவர் எடுத்தனரே
ஓட்டம்

தன்னுயிரில் காட்டும் வேகம்
மன்னுயிரைக் கொன்றழித்த விவேகம்
நாட்டுப்பற்றில் வோட்டுப் போட்டவனே
நோட்டம் பார்த்து போட்டானே ஒரு அடி
போற்றிடும் நெற்றியடி சரித்திரம்
படைக்கும்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading