அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-26.07.2022
கவி இலக்கம்-184
ஓரங்கட்டு
——————–
பொய்யை சொல்லி விட்டு
உண்மையென நம்ப விட்டு
பலரிடம் திட்டு கேட்டு விட்டு
இறுதியிலே கண்ணீர் விட்டு
மானம் கெட்டு ஒளிந்து அலைகிறாயே
உள்ளத்தை தொட்டுப் பார்த்து விட்டு
உண்மைக்கு முதலாய் கட்டுப்பட்டு
பொய்மையை முழுமையாய் ஓரங்கட்டு
உண்மையை ஒத்தாக சொல்லி விட்டு
நல்லவர்கள் கண்ணில் பட்டு
நாலு பேரிடம் வாழ்த்து கேட்டு
நல்லவனாய் வாழ்ந்து காட்டு

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading