மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 184
“கோலுயர நாடுயரும்”

சோறுண்டு சுகமுண்டு நேற்றுவரை எம்நாட்டில் வளமான வாழ்வுண்டு
இல்லாத பொருளெல்லாம் இறக்குமதி,எமக்கென்ன குறையுண்டு?
கையிலே காசிருந்தால் கடையிலெல்லாம் வாங்கலாம்
திறந்த பொருளாதாரம் திட்டமில்லா அரசாங்கம்

உற்பத்தி கைவிட்டோம் உழுதுண்டு வாழ்தலில் ஊக்கமிழந்தோம்
பண்டமில்லா பண்டசாலைகள் விண்ணைமுட்டும் விலைவாசி
இயன்றளவு சுருட்டிய ஆட்சியாளர் தப்பியோடி தலைமறைவு.
எரிபொருளில்லை, உணவு மின்சாரம் போக்குவரத்து இருட்டடிப்பு

திறைசேரி காலி அந்நியச்செலாவணி அதலபாதாளம்
உருட்டும் புரட்டும் சிரட்டையும் கையும், நம்பி உதவ ஞாலத்தில் எவருமிலர்.
ஆட்சி மாறவில்லை அதிகாரம் மாறியது அலிபாபா கையில்
அரசியல் பிழைத்தால் அறமே கூற்றாகும்,வறுமையை விதைத்தால் பட்டினிச்சாவே அறுவடையாகும்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading