மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

கலாதேவிபத்மநாதன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு
நாடே என் நாடே

ஆத்தோரம் தூண்டிவிட்டு ஆனந்தமாய் மீன் பிடித்து
தோப்போரம் கூட்டாஞ்சோறு தோழியோடு உண்டதையும்

வயலிறங்கி நண்டுபிடிக்க வரப்பினிலே விழுந்தெழுந்து
முயலுகுட்டி புதருக்குள்ள மயில்முட்டை கையிலேந்தி

காட்டோரம் மரங்களிலே கனி வகைகள் பலவும் உண்டு
வீட்டோரம் முற்றத்திலே விளையாடி மகிழ்ந்தோமே

விவசாய தோட்டத்திலே விரட்டிய காககுருவி கவலை மறந்து
கதைகள் பேசி காணியிலே ஊர்வலமே

வெள்ளை சீருடையில்
வெள்ளி் நகைப்புடனே பள்ளி சென்றுநானும் பயின்றதை மறவேனோ

சொந்தநிலம் என்று
சொட்டும் உரிமையில்லை பந்தமென்ற உறவுமில்லை பகைமையின்றி
பாவியானோம்

நெஞ்சோடு நின்றாடும் நினைவினை இழப்பேனோ
தஞ்சம்தந்த தாயகமே தாய்நாடும் சுகமன்றோ

🙏🏻🙏🏻நன்றி வணக்கம்🙏🏻👏🏻 கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading