மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

கெங்கா ஸ்டான்லி

விடுமுறை

விடுமுறை முடிந்தது
வீடு திரும்பியது.
பாடசாலை திறந்தது,
பழையபடி வேலையும் ஆரம்பம்.
இப்படியே ஓடும் வாழ்க்கை.
வசந்தம் கொண்டு
வந்த விடுமுறை
அடுத்த ஆண்டு வரை
காத்திருக்கும் ஆனவரை.
விடுமுறையில் களித்த
மகிழ்வான தருணமதை நினைத்து,
அடுத்த கோடைக்கான
எதிர்பார்ப்பு.
கோடைவிடுமுறை
குதூகலமானது.
வாடை வரும்வரை.
வசந்தம் தருவது.
வெய்யில் நிறைந்த காலம்,
வெண் மணலைத் தேடும் நேரம்.
கண்கள் பசுமை காட்சிகாணும்.
விரும்பிய இடமெல்லாம் சுற்றலாம்
விருந்தினர் பலரும் வரலாம்..
கோவில் திருவிழாக்கள் கும்மாளம்
கொண்டாட்டங்கள் கூடியதில்.
மக்கள் மனதில் மகிழ்வோட்டம்
மகிழ்ந்து கொண்டாடும் நெகிழ்ச்சி.
நாடுபல சுற்றிய நயமது வியந்து
கூடுகள் சென்று கூடிய நேரம்.
கூட்டமும் நாட்டமும்
கலைந்தது போகம்.
போகத்தில் மிதந்தோம் நாம்
வியூகம் சரியாக அமைந்ததால்.
அடுத்த தலைமுறையை
அனுசரித்தோம் நாம்
விடுமுறையும் வரட்டும்
என்று காத்திருந்த படி.

கெங்கா ஸ்டான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading