அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

13.09.22
ஆக்கம்-74
எண்ணம்
எண்ணம் போல நினைத்த வாழ்வு
பிறந்த மண்ணில் கிடைக்காது
ஏனிப்படி கடல் கடந்து போனது
கன்னம் வைத்த கயவர் சூழ்வு
கதிரைப்பிடி ஆசை குடைந்தது

அன்னம் தந்த சொந்த மண்
பென்னம் பெரிய இன அழிப்பால்
தமிழ் சமுதாயமே உடைந்து
உலகெங்கும் திக்குத் திக்காய்
அகதி ஆனது

அகதி மண்ணில் எல்லாமிருந்தும்
பகுதியாய் பிரிந்த தொல்லையால்
எதுவும் இல்லை என்ற ஏக்கமதில்
சின்ன வயதிலேயே சீரழிந்து
நல் எண்ணம் தொடர வாழாது
உயிர் நீத்தனரே

Nada Mohan
Author: Nada Mohan