Selvi Nithianandan

மாட்சிமை மிக்க மகாராணி
ஆட்சி அசராத ராணியாய்
அவனியிலே பல நாடுகளாய்
ஆளுமையில் தனிச்சிறப்பாய்
ஆண்டாரே இராச்சியமாய்

புன்னகை வதனமும்
பூரிப்பான தோற்றமாய்
புகழுடன் இறுதிவரை
புவனத்தில் வாழ்ந்தவரே

எழுபது ஆண்டுகாலச் சரித்திரம்
ஏற்கமுடியா இறப்பின் விசித்திரம்
எண்ணற்ற மக்களின் கண்ணீரின்சோகம்
எல்லாமே ஏற்க மறுக்குதே இப்போ

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading