மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சக்தி சக்திதாசன்

கண்களை மூடிக் கொஞ்சம்
கனவுலகில் மிதந்து வர‌
நெஞ்சிலொரு ஆசையடி
நினைவுகளின் ஓசையடி

நேற்றைகளை மறந்து
நாளைகளைத்  துறந்து
இன்றைகளில் மகிழ‌
ஏங்குதடி இதயம்

எண்ணங்களின் சுமைகள்
பஞ்சாகிப் பறந்து விட‌
எஞ்சியுள்ள நினைவுகள்
தேனாகி இனித்துவிட‌

உருளுகின்ற உலகத்தில்
புரளுகின்ற நிகழ்வுகள்
துணையாக வேண்டுமென
‌கெஞ்சுதடி என் மனமே

வண்ணங்களின் துணையோடு
வானவில்லின் மீதேறி
வளைவான வழியூடு
விரைந்துவிட என்நெஞ்சம்
வீறு கொண்டு எழுகிறதே

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading