இராசையா கௌரிபாலா

ஒன்றுபட வேண்டும்
—————————-
ஒன்றுபட்டு எழுக தமிழால்
உண்டாம் யாவர்க்கும் பலன்
இன்று இல்லைத் தமிழர்க்கு
இணைந்த வாழ்வு எங்கும்

பொங்கி எழுந்தே வாதமிழா
பொறாமை அகற்றியே வாதமிழா
பொங்கும் கடலும் வீரம்சொல்லும்
புவனம் உனதாகும் வாதமிழா

எங்கள் தோழமை உலகறியும்
வங்கம் ஆண்ட நம்குடியே
பங்கம் வேண்டாம் பகையறு
எங்கும் எம்மினம் வாழ்ந்திடவே

மரபுகள் உருமாறித் தடுமாறும்
மாற்றான் கேளிக்கையில் நாமோ
விரயமாக விவாதம் கொண்டு
வீண்பழி கேட்க்க வேண்டுமோ

ஆதியில்க் குடிகள் ஒன்றே
ஆண்டவன் படைப்பில் ஒன்றே
பீதியில் மக்கள் இன்று
பிந்தலாட்ட அரசியல் கண்டு.

இராசையா கௌரிபாலா

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading