மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

இரா விஜயகௌரி

சிறகொடித்த. பறவையினம்

எழிலான பொழுதெழுதி
எதிர்பார்ப்பை மனதெழுதி
காலச்சுழல்தன்னை வளைத்து
மகிழ்வெழுதும் சிறு நொடிகள்

அத்தனையும் கலைத்தெழுதி
சிறு கூட்டைப் பிரித்தெடுத்து
சிறுகுஞ்சை. நசித்தமுக்கி அவன்தன்னை
சிறைப்பறவை ஆக்கிய பெருநொடிதாம்

காத்திருப்பே கனவாகி அவன்
மொழியும் குரல். ஏக்கமிட
நாளாகி. மாதம். வருடங்களாய்
ஏங்கிக். கழிக்கிறாள் நிதமுமாய்

இருப்பானா. பிழைப்பானா அன்றேல்
இறப்பேதும் நிகழ்ந்திருக்க. வாய்ப்புண்டோ
அறியாத. முடிவுகளால். அங்கலாய்ப்பு
மேலோங்க உயிர்க்கூடு சுமக்கிறாள் இவள்

தாய்ப்பறவைக்கும். பெருவலிதாம்
குஞ்சுக்கோ சூனியத்தின் சுழல்களுக்குள்
விடைபகர யார்வருவார் நவீன உலகில்
உரைக்காத. மறை மொழியாய் வாழ்வு

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading