” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நேவிஸ் பிலிப்

18/8/22
கவி இல( 69)
கோர வெப்பம்

அழியாத ஓவியமாம்இயற்கையினை
சீரழித்தான் ஆறறிவழிந்த மனிதன்
பொறுமை காக்கும் நில மகளும்
கொதிக்கின்றாள் சீற்றமுடன்

பூமியெங்கும் கடும் வெப்பம
தவழ்ந்து வரும் தென்றல் காற்றும்
அனலாய் கொதித்திடவே
வெப்பம் தாங்கா மக்கள் தினமும் தவித்திடவே

நீர் நிலைகள் வற்றிப் போச்சு
பயிர் பச்சையும் வாடிப் போச்சு
தாகம் தீர்க்க தண்ணீரின்றி
மாக்களெல்லாம் மடியுதிங்கே

குழாய் தண்ணீரும் வாரா நிலை
குடி நீருக்காய் மக்கள் தவிக்க
காய்ந்து வெடித்த நிலங்களிலே
பசுமைகள் கருகலாச்சு

பெரு மரக் காடுகளும்
காட்டுத் தீயால் பற்றி எரிய
ஊருக்குள்ளும் பரவிய தீயால்
தற்காப்பாய் மக்கள் வேறிடம் நாட

கரு மேகமே வான் முகிலே
பெரு மழையாய் நீ பொழியாயோ
இறைவா உம் கருணையின்றி இவ்விடர்
தீர்த்திடுவார் யாருளரோ?

Nada Mohan
Author: Nada Mohan