மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

25.08.22
ஆக்கம்-240
தேடும் விழிக்குள் தேங்கிய வலி
தேடும் விழிக்குள் தொலைத் தூரமான துயரங்கள்
கூடி உறங்கிய உண்மைகள் ஊமையானதே
தமிழனாய்ப் பிறந்து குலைந்து போய்
வெந்து வெதும்பிய அழிவுகள்

அழுது அழுது வீங்கிய கண்களில்
என் உறவு எங்கே என
ஓலமிடும் ஆண்கள் பெண்கள்

நேற்று ,இன்று ,நாளை என்று
எத்தனை வருட வலி
எங்கு எதைப் பார்த்தாலும்
பிரிந்து போன முகங்கள்
இன்னும் விடை தராத தாகங்கள்

விடையே இல்லாத வினாவிற்குள்
தாங்கிய உள்ளமோ தேங்கிய
வலிக்கு கண்ணீர் மட்டுந்தானே
மருந்தாகின்றது

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading