” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Selvi Nithianandan

தேடும் விழிக்குள் தேங்கிய வலி (528)

நோட்டம்விட்டு தேடிய போதும்
ஆட்டம் காட்டும் அரசியல் நோக்கு
தேட்டம் அழித்தும் தேடும் உறவுகள்
தேங்கிய கண்ணீருக்குள் மெல்லநகர்வு

தாய் தந்தை பிள்ளையென
தரவுப் பட்டியலின் நீளம்
தாங்கமுடியா வேதனையால்
துடிதுடிக்கும் உறவுகளின் சோகம்

இன்று நாளை என எண்ணியபடி
இரண்டாயிரத்து பதின்நான்கு நாளும்நகர
இலங்கைத்தீவில் இப்படிச் சூழ்ச்சி
இரகசியமாய் கைதானவர்களின் நிலையே

இன்னும் எத்தனை நாட்கள்
வலியுடன் விழிமேலே காத்திருப்பு

Nada Mohan
Author: Nada Mohan