நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல (74) 22/09/22
பேசாமல் பேசும் உலக மொழி

ஆதியிலே இருந்த மொழி
மனிதன் முதலில் கையாண்ட மொழி
உள்ளத்தை உசுப்பி உணர்வுக்கு
உருக் கொடுத்த ஒரே மொழி

காலப் போக்கினிலே
ஒளியில்லா விழிகளுக்கும்
பேச்சில்லா வாய்களுக்கும்
ஒலி கேட்கா செவிகளுக்கும்
உயிர் தந்து உணர்ந்திட வைத்த மொழி

நாடு இன மத பேதமின்றி
செவிப் புலனற்ற ஏழு கோடி
மாந்தரும் கற்றுப் பயனடைய
அங்கீகாரம் பெற்ற மொழி

முகபாவனையில் அன்பு பேச
குறிப்புக்கள் விரல் நுனியில் நர்த்தனமாட
சைகை மொழியால் கற்றுயர்வோரை
புரட்டாசி இருப்த்து மூன்றாம் நாளில்
வாழ்த்துவோருடனிணைந்து வாழ்த்துகின்றோம்
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan