மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல (74) 22/09/22
பேசாமல் பேசும் உலக மொழி

ஆதியிலே இருந்த மொழி
மனிதன் முதலில் கையாண்ட மொழி
உள்ளத்தை உசுப்பி உணர்வுக்கு
உருக் கொடுத்த ஒரே மொழி

காலப் போக்கினிலே
ஒளியில்லா விழிகளுக்கும்
பேச்சில்லா வாய்களுக்கும்
ஒலி கேட்கா செவிகளுக்கும்
உயிர் தந்து உணர்ந்திட வைத்த மொழி

நாடு இன மத பேதமின்றி
செவிப் புலனற்ற ஏழு கோடி
மாந்தரும் கற்றுப் பயனடைய
அங்கீகாரம் பெற்ற மொழி

முகபாவனையில் அன்பு பேச
குறிப்புக்கள் விரல் நுனியில் நர்த்தனமாட
சைகை மொழியால் கற்றுயர்வோரை
புரட்டாசி இருப்த்து மூன்றாம் நாளில்
வாழ்த்துவோருடனிணைந்து வாழ்த்துகின்றோம்
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading