மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

சக்தி சக்திதாசன்

என் தேடலில் தெறிக்கும்
துளிகளின் துவக்கம்
என் பாடலில் அடக்கம்
இக்கவிதையின் ஆக்கம்

தாவிடும் ஆசைகள் ஓடிடும்
வழியின் ஓரத்தில் கண்டிடும்
சிற்சிறு சிந்தனைத் துளிகள்
கற்பிக்கும் பேருடை கருத்தினை

தத்துவம் என்றே ஒரு காலம்
தந்தை கூறிய அறிவுரைகளை
ஒதுக்கி ஓடிய வாலிபக்கோலம்
ஓடி முடித்தது தனது எல்லையை

எப்பொருள் இன்று யார்வாய் கேட்பினும்
அப்பொருள் தனிலே மெய்ப்பொருள் தனை
கண்டிட வைத்திட்ட காலத்தின் கோலம்
காணவைத்ததோ ஒரு உண்மைத் தாண்டவம்

நானென்று நிமிர்ந்த ஆணவக்கோலம்
நாணிட வைத்திடும் எனை நான் பார்க்கையில்
நானென்று இங்கே எதுவுமில்லை என்பதே
நானின்று வாழ்வில் கண்டிட்ட உண்மை

துரும்பென்று என்றோ எண்ணியதொன்றே
துருப்புச் சீட்டாய் வாழ்வினில் மாறிய விந்தை
ஞானம் என்றொரு ஆழியின் கரையில்
சிந்தையில் இருப்பதோ ஒருதுளி நீரே !

ஓயாத தேடல் ! ஓடிடும் காலம் ! மீத வாழ்வு
ஓங்கார கீதம் உள்ளத்தில் ஒலிப்பது என்றும்
ஓயாமல் சொல்வது தேடலின் அவசியம்
ஒளிந்திடும் உண்மையை துலக்கிட வேகம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading