” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

“ யோசி”

நட்புடன் சேர்ந்து நன்றாய்ப் பழகியதை
கட்டுக் கோப்புடன் கூடி வாழ்ந்ததை
ஒட்டி மகிழ்ந்து ஒன்றாய்ப் பழகியதை
நட்புடன் இணைந்து நல்லறம் புரிந்ததை

நின்று நிதானமாய் நினைத்து “ யோசி”
இன்பமுடன் வாழ்வு இனித்திட வாழ்ந்தாலும்
கடந்து வந்த காலத்தை “ யோசி”
மடமையை அகற்றி மாண்பினைக் காத்து
திடமாய் மனதை தினமும் சிந்தித்து
தடம்பதி வாழ்வு துலங்கிடத் தரணியில்
இடம்பிடி சமூக இடரும் அகற்றி
என்றும் நிதானமாய் நல்லதை “ யோசி”

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan