இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

உளவாளி ..
விளைவுகள் பாய்ச்சும் நீரோட்டம்
விளைந்திடும் அறிவின் கண்ணோட்டம்
ஆற்றிடும் காரியம் பலவாகும்
அரும்பென முகிழ்வது அன்பாகும்
அறிதல் தெரிதல் அளப்பெரிதாய்
அன்றெனப் பகிர்தலே நன்றி நிலை
மதிப்பும் உயர்வும் மண்டியிட
மகிழும் உளமே உவகை பெற
உதிரும் வார்த்தை உளமார
பகிரும் நன்றிப் பண்பாடு
பயிலும் வாழ்வின் விலையேது
சேவை சமூகம் செய்தொழிலில்
நாளும் பலமே நல்வாழ்வு
நட்பு உறவு வாழ்வியலில்
நன்றிக்கு உரித்தே நம்வாழ்வு
என்றும் மறவாக் கைமாறு
எழுத்தில் பதியா பேரேடு
உலகை உணர்த்தும் உபகாரி
உளத்தில் நிலைக்கும் உளவாளி!.
நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading