மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ரஜனி அன்ரன்

“ இசையரசி “….கவி…ரஜனி அன்ரன் (B.A) 09.02.2023

இசைத் துறையின் பொக்கிஷம்
இந்தியத் திரையிசையின் இசையரசி
இசைஞானம் மிக்க கலைநாயகி
திரையிசையில் பொன்விழாக் கண்ட கலையரசி
தேசீய விருதுகளை மூன்றுமுறை பெற்று
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி
பத்மபூசண விருதிற்கும் பரிந்துரைக்கப்பட்ட வேளை
பறித்துச் சென்றானே காலனும் விரைந்து !

இசையரசியின் இசைப்பயணம்
எழுதிவிட முடியாக் காவியம்
ஏழு ஸ்வரங்களையும் இசைத்த இசைவாணி
சங்கதிகளை இசைத்துப் பாடி
சங்கீத உணர்வோடு இசைத்த குயில்
பாடாத மொழிகள் எதுவுமில்லையே !

தமிழுக்கும் தமிழிசைக்கும் பெருமை சேர்த்து
தமிழிசையால் எமைக் கட்டிப் போட்டு
தாயகக் கானங்களை எமக்காய் பாடி
தலைமுறைகள் நான்கோடும் பயணித்து
இசைவானில் இரண்டறக் கலந்துவிட்ட
இசையரசியின் இசைப்பயணம்
இனிய கீதங்களாய் என்றும் ஒலிக்கும்
இசையரசியின் இழப்பு இசைத்துறைக்கு பேரிழப்பே !

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading