நகுலா சிவநாதன்

புழுதி வாரி எழும் மண் வாசம்

புழுதி வாரி எழும் மண்வாசம்
புகழைத் தந்த நல்வாசம்
அகத்தில் அன்பு பொழிந்திடவே
அமைதி கிடைத்த நன் நாளே!

ஆழ்கடலில் முத்தாக ஆனமட்டும் வித்தாக
ஆற்றல் தேடி வந்தோமே அல்லல் பல சுமந்தோமே!

காற்று அடிக்கும் வேளையிலே
கன்னி மனதில் ஆசையிலே;
ஆற்றின் ஓரம் அமைதி கண்டு
ஆனந்தத்தில் மிதந்தோமே!

பாட்டுப்பாடி மகிழ்ந்திருந்து
பாதையோரம் நிலாவெளிச்சம்
நாற்று நட்டு உழைத்த காலம்
நாளை வருமா? அந்த நாளும் ?

நகுலா சிவநாதன்1709

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading