பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

உலகவிழிக்குள் ஒற்றைமுகவரி
அடையாளப் பதிப்பின் ஆணிவேர்
அன்னை மொழியின் ஆழவேர்
என்னைச் சுமக்கும் முகவரியே
ஏற்றம் போற்றும் தாய்மொழியே

தரணியில் தோன்றிய வரலாறு
தனித்துவமான நிலைப்பேறு
சங்கமருவிய காலம் முதல்
செம்மொழிச் சிறப்பின் வேரோடி
சிந்தை நிறைக்கும் தாய்மொழியே
இலக்கண இலக்கிய நயத்திலே
ஈடிணையற்றது எம்மொழியே
ஆன்றோர் ஆற்றல் புலமையும்
அதிமதுரத் தமிழின் இளமையில்
வான்புகழ் வார்த்த திருக்குறளும் வானுயர்ந்த சான்றின் செதுக்கலில்
வாழும் தாய்மொழி காவியமே

அடுத்த தலைமுறை விருட்சத்தின்
ஆணிவேரே நீ வாழி
இலகுதமிழின் இயல்திறனில்
அழகு நிரம்பி நடைபயில்க!
தாய்மொழி நீயே தனியழகே!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading