” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ தமிழர் கலையாம் தமிழிசை “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 23.02.2023

தமிழுக்குப் பெருமை சேர்ப்பது தமிழிசை
தமிழரின் பாரம்பரிய இசை தமிழிசை
இயல் இசை நாடகமாகி முத்தமிழாய்
இசையும் கூத்தும் இணைந்து இசைத்தமிழாய்
இரண்டறக் கலந்தது வாழ்வோடு தமிழிசை !

ஆதியான தமிழிசைக்கு ஆதாரமாய்
இலக்கணம் வகுத்தது அகத்தியம்
தொன்மைக்கு சான்றானது தொல்காப்பியம்
புத்துயிரானது பக்திப்பனுவல்கள் பாசுரங்கள்
கலங்கரை விளக்கானது சிலப்பதிகாரம்
மறுமலர்ச்சியைச் செய்தாரே பாரதியாரும் !

இசையைத் தொழிலாக்கி
தொழிலுக்கு இசைக் கருவியானது பறை
பொழுதை இன்பமாய்ப் போக்க
யாழை இசைத்து மக்கள் மகிழ
தமிழிசைக்கு இலக்கணம் தந்தது யாழ்நூல் !

முத்தமிழின் நடுநாயகமாம் தமிழிசை
தாலாட்டோடு தொடங்கி நீராட்டு வரை
தமிழர் வாழ்வோடு பயணித்து
தமிழிசையாகித் தரணியை ஆளுது
தரணியெங்கும் தமிழிசை முழங்கட்டும்
மண்வளக் கலைகளும் மகுடம் சூடட்டும் !

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading