அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 212
28/02/2023 செவ்வாய்
“மொழி”
———
இனத்தைச் சுட்டிட மொழி உண்டு!
இருப்பில் ஆயிரம் வகை உண்டு!
தினம் தினம் வளரும் மொழியுண்டு!
தேய்ந்து அழியும் மொழியும் உண்டு!

அநாதியாம் மொழிகள் பலவுண்டு!
அவற்றில் தமிழுக்கும் இடமுண்டு!
கனதியாம் இலக்கியம் அதற்குண்டு!
கட்டுக் கோப்பதன் நிறை பண்பு!

ஐந்தறிவு கொண்ட உயிரினங்கள்
அவரிடைப் பேசவும் மொழியுண்டு!
சிற்றறிவு கொண்ட சித்தெறும்பும்
சீராய் தொடர்பாட வழி உண்டு!

“பரதம்”என்றொரு மொழியுண்டு!
“பாவங்கள்” நிறைய அதற்குண்டு
“கதகளி” என்னும் மொழி உண்டு!
கதைகள் சொல்வது அதன் பண்பு!

“மௌனம்” என்பதும் ஓர் மொழியே!
மானிட இனத்தின் பெரு மொழியே!
தவனம் காட்டிடும் இம் மொழியே!
தரணியில் இதுவும் தனி மொழியே!

கண்கள் பேசுவதும் ஓர் மொழியே!
கால்விரல் கோலமும் ஓர் மொழியே!
மின்னல் போன்றது இம் மொழியே!
மெதுவாய் வருடிடும் இம் மொழியே!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading