” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமதி.பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு -212

தலைப்பு – மொழி

மொழியின் ஆரம்பம் சைகையில் பிறந்தது
மௌனங்கள் கலைந்து மதஇனம் பெருகியது
கலாச்சாரம் வரலாறு அடிச்சுவடு கூற
உருவான அதிசயம் உலக மொழிகளாம்.

தென் பொதிகையின் தென்றல் மொழி
கம்பன் கையினில் தவழ்ந்த மொழி
வள்ளுவன் வகுத்த வாழ்க்கை மொழி
பாரதியின் புதுமைப்பெண்னை உருவாக்கிய மொழி.

மொழிகளின் தாயகமாய் முச்சங்கம் வளர்த்த
இலக்கண ஆளுமையோடும் இலக்கியச் சுவையோடும்
வீறுநடை போடும் மொழியான செந்தமிழை
தாய்மொழியாய் அடைந்தது நான்பெற்ற பாக்கியமே.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்.
London
25/02/2023

Nada Mohan
Author: Nada Mohan