பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் கவிக்காக
சிவமணி புவனேஸ்வரன்
சுவிஸ் இல் இருந்து.
தலைப்பு :
*நாதம்*
சந்தத்தின் பாடல்களில் சங்கதிகள் கொஞ்ச
சாரீரம் கொண்டாடும் சங்கீத நாதம்

செந்தமிழின் செவ்வியலில் செந்தாள நடனம்
சிந்துமகள் காலசைவில் சிலம்பொலியின் நாதம்

சுந்தரக் கலைவாணி சுரமீட்டும் வீணை
சிந்திவரத் தேனிசையில் சேர்கின்ற நாதம்

நந்தகோபன் குழலோசை நந்தவனம் காண
பந்தமென பசுக்களுக்கும் பரிசளிக்கும் நாதம்

மங்கையவள் மணக்கோலம் மணவறையில் தங்க
மாங்கல்யம் சேர்க்கின்ற
மங்களத்து நாதம்

சங்கத்தமிழ் தொடர்ந்து சாற்றும் தமிழ் ஓசை
சந்திக்கும் தங்குமந்த
சங்கு முழங்கு நாதம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading