இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Selvi Nithianandan

தீ

பஞ்ச பூதங்களில்
ஒருவராய்
பரணி கார்த்திகை
விளக்கானாய்
பார்ப்பவர் கண்ணுக்கு விருந்தானாய்
பரவசமாய் இறைவனுக்கே
ஒளியாவாய்

ஆதியிலே கல்லிலே
பிறப்பானாய்
பாதியிலே நவீன
விளக்குமானாய்
ஜாதி பேதம்
நீயறியாய்
ஜோதி உன்னை
தொழுகின்றோம்

அவனியிலே பலபெயரில்
வலம்வருகிறாய்
அடுத்தவர் மனதையும்
பற்றவைக்கிறாய்
ஆலயங்களில் தீச்சட்டியாய்
எரிகின்றாய்
அக்கினியாய் இறுதியிலும்
சங்கமமாகின்றாயே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading