19
Jun
கணப்பொழுதில்
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
தீ
பஞ்ச பூதங்களில்
ஒருவராய்
பரணி கார்த்திகை
விளக்கானாய்
பார்ப்பவர் கண்ணுக்கு விருந்தானாய்
பரவசமாய் இறைவனுக்கே
ஒளியாவாய்
ஆதியிலே கல்லிலே
பிறப்பானாய்
பாதியிலே நவீன
விளக்குமானாய்
ஜாதி பேதம்
நீயறியாய்
ஜோதி உன்னை
தொழுகின்றோம்
அவனியிலே பலபெயரில்
வலம்வருகிறாய்
அடுத்தவர் மனதையும்
பற்றவைக்கிறாய்
ஆலயங்களில் தீச்சட்டியாய்
எரிகின்றாய்
அக்கினியாய் இறுதியிலும்
சங்கமமாகின்றாயே
செல்வி நித்தியானந்தன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.