” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Selvi Nithianandan

தீ

பஞ்ச பூதங்களில்
ஒருவராய்
பரணி கார்த்திகை
விளக்கானாய்
பார்ப்பவர் கண்ணுக்கு விருந்தானாய்
பரவசமாய் இறைவனுக்கே
ஒளியாவாய்

ஆதியிலே கல்லிலே
பிறப்பானாய்
பாதியிலே நவீன
விளக்குமானாய்
ஜாதி பேதம்
நீயறியாய்
ஜோதி உன்னை
தொழுகின்றோம்

அவனியிலே பலபெயரில்
வலம்வருகிறாய்
அடுத்தவர் மனதையும்
பற்றவைக்கிறாய்
ஆலயங்களில் தீச்சட்டியாய்
எரிகின்றாய்
அக்கினியாய் இறுதியிலும்
சங்கமமாகின்றாயே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan