16
Apr
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
16
Apr
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026
குரலென்பது வெறும்...
-நாதன் கந்தையா-
= விடியல் =
பேய் கொள்ளும்
பிணியொடொரு பிரிவும் சேரும்.
பித்தொடு பிடாரிகளும்
துணையாயாவர்.
தாயில்லை சேயில்லை
இல்லுமில்லை.
தரித்திரமே உருத்திரமாய்
கொள்வார் காண.
வேர்மூலம் விடையில்லா
வினைகள் ஓங்கும்.
வேடன் கை வலையாக
சதிகள் சூழும்.
கானகத்தில் வாழ்வதுபோல்
கனவும் தோன்றும்.
காற்றிடையே தூசியென
வாழ்வும் ஆகும்.
பாழாகி போவாய் நீ
என்பாள் தாரம்.
பக்கதில் கொள்ளாமல்
சுற்றம் மேவும்.
நேராக இடிவந்து தலையில் வீழும்.
நிறைவாக அஃதே னென்று
கேட்டால் நீயும்.
மானுடத்தின் விடியலை யார்
தடுத்தார் என்றால்
மாற்றமில்லை அத்தனையும்
நடந்தே தீரும்.
அறிவு நிறை ஓர்ப்புடனே
கடைப்பிடித்து.
கண்ணியமாய் பெண்ணியத்தின்
விடியல்மீது
களங்கமது புழங்க எவர்
முயன்றால் மேலே
கண்டதெல்லாம் தொடரும்
உன் வாழ்வில் லென்பேன்.
– நாதன் கந்தையா-
Author: Nada Mohan
18
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாரம் போனது தெரியாது
வருஷம் ஆனது புரியாது
350 ஆம் வாரம் சொரிந்து
முழுமூச்சாய் மெருகூட்டி
மனமோ...
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...