மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

அபிராமி கவிதாசன்.

21.03.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -215
தலைப்பு !
“விடியல்”
விடியல் பொழுதே வருக வருக
விண்ணில் ஒளிகொண்டு
விளக்காய் வருக //

பட்சிகள் நாதம் தருக தருக
பலவண்ண குரலில் பாடல் தருக //

மாசற்ற காற்றில்
சிலுசிலு தென்றல்
மனதைத் தொட்டு மகிழ்வாய் செல்க //

நிலமகள் குளிர நீரும் தெளித்து
நித்தம் முற்றத்தில் கோலம் வரைக//

வைகறை மலர்கள் வாசம் வீசிட
மோகம் கொண்டு வண்டுகள் சேர்க //

நிலைப்பெண் மெல்ல மேற்கில் மறைய
நித்தில பரிதி கிழக்கில் மலர்க /

நனிமிகு நன்றிகள்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading