Jamunamalar Indrakumar

நீர்க்குமிழி

தண்ணீ ருள்ளே பள்ளம் போடும்
பள்ளம் மேலே வள்ள மாகும்
வளியை சுமந்து வாழ்வைத் தொடக்கும்
வட்ட வடிவில் வரைந்து செல்லும்
வரைந்த கணமே வாழ்வை முடிக்கும்
வாழ்வின் உண்மை பலதை
உணர்த்தும்
பிறப்பும் இறப்பும் இயல்பு
என்றிடும்
நிலையாப் பண்பை சிறப்பாய் கூறும்
பூமிப் பந்தின் வடிவம் எடுத்து
நிறமும் மணமும் சுவையும்
கொள்ளா
உருவம் தாங்கும் நீரில் மட்டும்
பெயரும் உண்டு நீர்க் குமிழியாய்
பட்ட மரத்தில் பூக்கத் தொடங்கும்
விட்ட மழையில் முகிழ்த்துத்
தொங்கும்
றோஜா முள்ளில் பூத்துக் குலுங்கும்
மழைத்துளி அவளே மொட்டாய் முகிழ்வாள்
குமிழி போலே குழிந்து இருப்பாள்
கதிரவன் கடுப்பில் கரந்து
செல்வாள்

ஜமுனாமலர் இந்திரகுமார்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading