Jamunamalar Indrakumar

நீர்க்குமிழி

தண்ணீ ருள்ளே பள்ளம் போடும்
பள்ளம் மேலே வள்ள மாகும்
வளியை சுமந்து வாழ்வைத் தொடக்கும்
வட்ட வடிவில் வரைந்து செல்லும்
வரைந்த கணமே வாழ்வை முடிக்கும்
வாழ்வின் உண்மை பலதை
உணர்த்தும்
பிறப்பும் இறப்பும் இயல்பு
என்றிடும்
நிலையாப் பண்பை சிறப்பாய் கூறும்
பூமிப் பந்தின் வடிவம் எடுத்து
நிறமும் மணமும் சுவையும்
கொள்ளா
உருவம் தாங்கும் நீரில் மட்டும்
பெயரும் உண்டு நீர்க் குமிழியாய்
பட்ட மரத்தில் பூக்கத் தொடங்கும்
விட்ட மழையில் முகிழ்த்துத்
தொங்கும்
றோஜா முள்ளில் பூத்துக் குலுங்கும்
மழைத்துளி அவளே மொட்டாய் முகிழ்வாள்
குமிழி போலே குழிந்து இருப்பாள்
கதிரவன் கடுப்பில் கரந்து
செல்வாள்

ஜமுனாமலர் இந்திரகுமார்

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_215 சிவாஜினி சிறிதரன் "நல்லுறவு" பொறுமை சகிப்பு தன்மை இரண்டும் தெய்வீக குணங்கள் இதற்கு எஞ்சிய நற்குணம் ஏது...

    Continue reading

    ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

    Continue reading