இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

திருமதி. கலாதேவி பத்மநாதன்

சந்தம் சிந்தும் சந்திப்பு217 கவிதை தலைப்பு
_ தவிப்பு!

அப்பா என்னும் அழகிய உறவை
ஆண்டு ஒன்றாய் அர்ப்பணித்து தவிப்பு///

இப்போ எம்முடன் இல்லை நினைக்க இதயம் துடித்து இன்னல் குவிப்பு///

எப்போ நெஞ்சில் எழுதோ நினைவு
எல்லா செயலும்
ஏனோ மறப்பு

உப்புக் கண்ணீர்
உருகி வடித்து
உயிராய் பிள்ளைகள் உலாவி தவிப்பு

சொப்பனம் சங்கதி சொன்னதும் இல்ல சொந்தமும் இறந்ததை சொற்பமும் மறுப்பு

எப்போதும்
உடன்வாழ்ந்த
எங்களின் தெய்வம்
எங்கேயென தேடுகிறோம்
ஏங்கி துடித்து
நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading