இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சத்தி சத்திதாசன்

மெல்ல வீசும்
மாலைத் தென்றல்
இனிமை பூசும்
எந்தன் மீதே
சிந்தும் வாசம்
மல்லிகை மலரில்
நெஞ்சில் நேசம்
மெல்லெனப் பூக்கும்

நிலவின் குளிரில்
சில்லென விரியும்
அல்லி மலரின்
மென்மை நினைவை
வருடும்
பெளர்ணமி வெளிரில்
பசுமைத் தரையில்
இரவில் பலரின்
இதயங்கள் விழிக்கும்

விழிகளை மூடிக்
கனவினில் மூழ்கி
வழிகளைத் தேடி
விளிம்பினில் வாழ்க்கை
வருடங்கள் ஓடி
அகவைகள் கூடி
நிகழ்வினைப் பாடி
நிஜமொரு புலம்பல்

காற்றினிலே ஒரு கீதம்
கேட்டிடும் நேரம்
பாட்டினிலே ஒரு வருடல்
தேடிடும் வேளை
நேற்றினிலே நான்
சுவைத்திட்ட கரும்புகள்
வேற்றினிலே இனிக்
காண்பதில்லை உறவுகள்

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading