தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

நகுலா சிவநாதன்

உழைப்பே உயர்வு

உதிரம் சிந்தும் விவசாயி!
உழைப்பை நல்கும் உழைப்பாளி!
களைப்பைப் பாரா உழைப்பாலே
காலம் பொன்னாய் ஆக்கிடுமே!
பிழைப்பே இந்த உலகாளும்
பிறப்பு முதலாய் இறப்புவரை!
தழைக்கும் பயிரே உழவர்தாம்
தந்த உழைப்பால் வணங்கிடுவோம்!

உதிரம் சிந்தும் நல்லுழைப்பே
உணவை வழங்கும் மக்களுக்கே
வதிக்கும் வாழ்வில் வரும்வசந்தம்
வாழ்வு மலர்ந்து மணம்வீசும்!
பதிக்கும் பயிரும் பலன்தருமே
பாரில் வளர்ச்சி படர்ந்திடுமே!
விதிக்கும் காலம் விளைவுபெற
விளைத்த உழைப்பே உயர்வாகும்!
ஓடி யோடி உழைத்திடுவோம்!
ஒளிரும் வண்ணம் வாழ்ந்திடுவோம்!
தேடித் தேடிச் செயல்புரிவோம்
தேவை தன்னை நிறைவேற்றும்!
கூடிச் சேர்ந்தே உழைத்திட்டால்
கோலங் காணும் இவ்வுலகே!
நாடி நாமும் நலஞ்செய்வோம்!
நன்றே வாழ்வோம் உழைப்போடு

நகுலா சிவநாதன்1720

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading