திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 118

“அகதி” நாம் பெற்ற வரமா?

அகதி
அர்த்தம் புரியமலேயே
அகன்று வந்த
ஐரோப்பா!

நாட்டில் பிரச்சனை
வேலை கிடைக்குமா
என கேட்டால்?!

ஏன் வந்தாய்?
உன் பிரச்சனை தான் என்ன?
என பல வினாக்கள்?

நிதர்சன உண்மைகளும்
அரிதாரம் பூசிய
வார்த்தைக் கோர்வைகளும்
வாழ்வு தந்தது!

ஆறுமாத. விசா
தந்து
அகதியாக முகப்பிரதியில்
முத்திரை குத்தி

நாட்களை ஓட்டி
நான் அகதியே
வாதாடி!
பெற்ற இந்த வாழ்க்கை

நினைவு இருக்கின்றதா?
நாம் பெற்ற வரம் என்று

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading