கமலா ஜெயபாலன்

குழலோசை
சந்தம் சிந்தும் சந்திப்புக்காக
ஓசைகள் பலவிதம் ஒலிக்கும் விதம்விதம்
பாசைகள் வேறெனினும் பரவிடும் ஓசைநயம்
ஏழு சுரங்களுக்குள் எல்லாம் அடக்கம்
வழும் மனிதருக்கு வரமாய் கிடைக்கும்

இசையால் மயங்காத இதயமெது சினிமாவரி
அசையாத மனமும் அசையும் குழலோசையால்
மடங்காத பாம்பும் மடங்கும் மகுடியால்
அடங்காத மனிதனும் அடங்குவான் இசையாலே

காற்றலையில் சேர்ந்து கதைகள் பேசும்
நாற்றிசையும் அதனுள்ளே நர்த்தனம் ஆடும்
மூங்கலின் மகத்துவம் முன்னோர் படைப்பு
தாங்கிடும் உலகம் தாகமும் தீராது

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading