நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

கமலா ஜெயபாலன்

குழலோசை
சந்தம் சிந்தும் சந்திப்புக்காக
ஓசைகள் பலவிதம் ஒலிக்கும் விதம்விதம்
பாசைகள் வேறெனினும் பரவிடும் ஓசைநயம்
ஏழு சுரங்களுக்குள் எல்லாம் அடக்கம்
வழும் மனிதருக்கு வரமாய் கிடைக்கும்

இசையால் மயங்காத இதயமெது சினிமாவரி
அசையாத மனமும் அசையும் குழலோசையால்
மடங்காத பாம்பும் மடங்கும் மகுடியால்
அடங்காத மனிதனும் அடங்குவான் இசையாலே

காற்றலையில் சேர்ந்து கதைகள் பேசும்
நாற்றிசையும் அதனுள்ளே நர்த்தனம் ஆடும்
மூங்கலின் மகத்துவம் முன்னோர் படைப்பு
தாங்கிடும் உலகம் தாகமும் தீராது

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan