நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 236 —குழல் ஓசை —. மூங்கில் குழாயினிலே
மூன்று நாலு துளைக்குள்ளே
தேங்கி கிடக்கும் நல்ல ஓசை
இது தெவிட்டாப்
புல்லாங்குழல் ஓசை
ஆட்டுத் தோலாலே
அமைத்து இரு பக்கம்
கோலி மரத்தாலே
செதுக்க
கொடுக்கும் தவில்
நல்ல ஓசை.
நாத சுரம் கொடுக்கும்
நல்லோசை
தவிலுக்கு
வேத முறை
சுப நிகழ்வு யாவும்
விடாதே இக் குழல் வடிக்கும்
ஓசை
கொம்பு ,தமுக்கு என்ற
குழலாலே
இசை வடிக்கும்
எங்கள் தமிழ் மரபு
இசை கருவி
இதில்
எழும்பும் குழல் ஓசை
அருவி
குழவோசை யாழ் ஓசை
கொடுக்கும்
சிறப்போசை
மழலை பிள்ளை
கதைக்கீடு இல்லை
வள்ளுவனின்
குறள்சொல்லும் உண்மை.
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

Nada Mohan
Author: Nada Mohan