ரஜனி அன்ரன்

“ கார்த்திகையாள் வரவு “ கவி…ரஜனி அன்ரன் (B.A) 02.11.2023

கார்த்திகையாள் மலர்ந்து விட்டாள்
கலகலவென விழித்து விட்டாள்
மழை வெயில் குளிரென
மத்தாப்பைத் தாங்கி நின்று
முத்தாப்பாய் வந்து விட்டாள் !

காலநிலையும் எழிலூட்ட
காற்றலைகள் மோதிவர
கார்காலம் மழை பொழிய
கணகணப்பும் கூடிவர
கார்த்திகையாள் மலர்ந்து விட்டாள் !

மழைச் சாரல் அடித்துவிட
மரக்கிளைகள் இலை உதிர்க்க
மஞ்சள் வர்ண இலைகளும் தான்
மண்ணினை அலங்கரிக்க
மலரினமும் மயங்கிவிழ
மலர்ந்து விட்டாள் கார்த்திகையாள் !

கார்த்திகை மைந்தர்களை
கல்லறைக் காவியரைத் துயிலெழுப்ப
காந்தள் கொண்டு வந்துவிட்டாள்
காரிகையாம் கார்த்திகையாள்
கனதியான நினைவுகளும் காட்சியாகுதே !

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading