இரா.விஜயகௌரி

மீண்டுமோர் கார்த்திகை……….
மீண்டெழ முடியாத பேரிடிகள்
மீட்பரை தேடிடும் வாழ்வு நிலை
ஆதாரமற்ற வாழ்வுச்சுழற்சி
அலைந்தலைந்து. தேடுடுகின்றோம் -நாம்

தீபமும் தூபமுமய் வணங்கிடுவார்
ஆயிரமய்அரங்குகளில். நினைவெழுச்சி
அவலமாய் தினம்தினம் அலைகின்றோம்
அனுசரிக்க உறவுகளின் கரங்களெங்கே

வானத்தின் விரிசல்களாய் குடிசைகளும்
வறுமையின் கோடுகளாய் வாழ்வு வட்டம்
எதையெண்ணி எமையவர் விட்டகன்றார்
அந்த உன்னத்த்தை உணர்ந்தார் யாருளரோ

யாசகம் நாம் கேட்கவில்லை -நம்
குமுறல்களால் கோலமிட்டு. வாழுகிறோம்
வழிகாட்ட உறவுகளைத் தேடுகிறோம்
பரிவட்டம் பல்லக்குஎதுவும் வேண்டாம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading