மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
கலவரம்
———-
குடும்பத்தில் ஏற்பட்ட கலவரம்
கோர்ட்டு வரை சென்றது
தீர்ப்பு குடும்பம் பிரிவு
தீராத வலி பிள்ளைகளுக்கு
நாட்டில் ஏற்பட்ட கலவரம்
நாட்டு மக்களை இடம் பெயர
வைத்தது
கலவரத்தில் சிக்கிய மக்கள்
கதிகலங்கி நின்ற போது
கைகொடுக்க யாரும் வரவில்லை
வேடிக்கை பார்த்தனர் எல்லா நாடுகளும்
கலவரம் தீர்ந்தது என்றார்கள்
களப்பலி ஆனவர்கள் எம் மக்கள்
மண்ணாசையால் மனதில் ஏற்பட்ட கலவரம்
பெண்ணைக் காயப்படுத்தியதே
சங்க இலக்கிய ம் கூறும் போதனை
இதுவா
கலவரம் இல்லா நாடும்
கலவரம் இல்லா வீடும் உண்டா
இது இயற்கையின் நியதி
இங்கு எதற்கு மீதி
மனதில் ஏற்பட்ட கலவரத்தால்
உள்ளமே உடைந்ததே
மனதின் தெளிவின்மையால் தானே
தெளிவுகள் ப்பிறந்தால் எல்லாமே
கலவரமின்றி சுமூகமாகுமே
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading