” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 246 “நிலாவில் உலா”.———/

“வான் நிலாவிலே உலவி வர ஒரு
வாய்ப்பு கிடைக்காதோ
தேன் நிலவை மீள மாங்குயிலுடன்
திகட்ட களிக்கேனோ.!”

“ஆகாயப் பந்தலில் பொன் ஊஞ்சலிலே நாம் ஆடிக் களிப்போமோ
தேய்கின்ற நிலா குறை என்னவள் நெற்றி திலகத்தால்
நிறைக்கேனோ!”

“வெண் மஞ்சலை நல்ல வித மஞ்சல் ஆக்கிடும்
வித்தையை செய்யேனோ
பொன் மஞ்சல் தன்போல
என்னவள் நிலவுக்கு
பூசிட செய்யேனோ!”

“வெண்மதி யிலும் களங்கம்
உண்டெண்ற சொல்லை
விலக்கிட செய்யேனோ
தண் மதி எங்கனும் தேடி அக்கறை எனும் குறையை கழுவேனோ!

“ஈழ தமிழ் கொடி எம் கொடி
அங் இனி எங்கும் பறக்க வைப்பேன்
ஆயுள் ஐயாயிரம் ஆன எம் பைந்தமிழ் அகிலத்தில்
ஒளிர வைப்பேன்.”

-எல்லாளன்-

Nada Mohan
Author: Nada Mohan