இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

நிலாவின் உலா

மண்ணில் வாழ்ந்த மகிழ்வான தருணம்
எண்ணக் கருக்கள் எழிலாய் தவழுது
கண்ணாம் பூச்சி கட்டி தேடியது
கண்ணுக்குள் வருகுது காலத்தைக் கூறுது

நினைவில் வருகிறது நிலவில் உலாவியது
துணையாய் தோழிகள் நடையாய் நடந்து
சிவன்ராத் திரியிலே சேர்ந்த நடையில்
பவனி வருமே பக்குவமாய் நிலாவும்

உள்ளம் பொங்க உவகை அடைவோம்
கள்ளம் இல்லாமல் கடந்தது வாழ்வு
துள்ளித் திரிந்த பள்ளிப் பருவம்
அள்ளி நிலாவை அணைக்கத் தோன்றும்

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading