திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

நேரம்

நேரம் சரியில்லையென வேலையை தள்ளிப்போடாதே
தூரம் போனதெல்லாம் திரும்பியுந்தான் வாராதே
நிற்காமல் ஓடும் கடிகாரத்தை பாராயோ
உற்சாகத்தோடு வருந்தடை உடைத்து மீறாயோ

காலமதை வீணாக்கி ஆயுளும் கழிவதா
கோலமதன் செயலிழப்பில் மெய்யறிந்து முழிப்பதா
இருபத்துநான்கு மணிநேரமும் இயற்கையின் வரம்
வரும்நொடிகள் ஒவ்வொன்றையும் பற்றட்டுமே கரம்

சூரியன் நேரம்பார்த்தா வானில் உதிக்கிறது
பாரின் செயலினிலே ஒய்வின்மை தெரிகிறது
பஞ்சபூதங்களும் விடுமுறை எடுக்காதே செயல்புரிகின்றன
பஞ்சிப்படாது இயங்கியே பயன்களை குவிக்கின்றன

இனியாவது பழிபோடாது ஆற்றுவோம் கடமை
கனிந்துவிடும் நேரம் அகற்றிவிடு மடமை
நேரம்பாரா செயல்பாடே வாழ்க்கையின் சிறப்பு
நேரமில்லையென புலம்புவோரும்
அறியவேண்டுமிதன் மதிப்பு

ஜெயம்
23-04-2024

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading